Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இறுதி நிமிடத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் – ஆஸி.க்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

இறுதி நிமிடத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மே.இ.தீவுகள் – ஆஸி.க்கிடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி

1 minutes read

கொவிட்-19 கவலைகள் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி பார்படோஸில் தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைநிறுத்தப்பட்டது.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணியானது மே.இ.தீவுகள் அணியுடன் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரண்டாவது போட்டி ஜூலை 22 (இலங்கை நேரப்படி இன்று) நடைபெறவிருந்தது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 

அதைத் தொடர்ந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதாக தகவல் வெளியான நிலையில், ஒரு பந்து கூட வீசப்படாது, போட்டி ஆரம்பமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பின்னர் மைதானத்தில் இருந்த இரு அணி வீரர்களும் மற்றும் ஊழியர்களும் பாதுகாப்பு குமிழியின் கீழ் ஹோட்டல் அறைகளுக்கு திரும்பிச் சென்றனர்.

இந் நிலையில் அனைத்து உறுப்பினர்கள், வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் இன்று மீண்டும் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். 

சோதனை முடிவுகள் தெரிந்தவுடன் போட்டி எப்போது மறுதொடக்கம் செய்யப்படும் என்பது குறித்த முடிவு எடுக்கப்படும். அது வரை அனைவரும் அவர்களது அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று என்று மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More