ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் நாட்டின் முன்னணி கிரிக்கெட் கழகங்களுக்கு இடையிலான 2021/22 பருவ காலத்துக்கான 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளது.
26 கழகங்கள் பங்கேற்கும் இப்போட்டித் தொடரில் தலா 13 அணிகள் ஏ,பீ என இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு விளையாடவுள்ளன.
இதன் ஆரம்ப சுற்றுப் போட்டிகள் ஒக்டோபர் 27,30,31 ஆம் திகதிகளிலும், நவம்பர் மாதம் 3,6,7,10,13,14,17,20,21,24 ஆகிய 13 தினங்களில் நடத்தப்படவுள்ளன.
அரை இறுதிப் போட்டிகள் நவம்பர் 26 ஆம் திகதியன்றும், இறுதிப் போட்டி 28 ஆம் திகதியன்றும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் பிற்போடப்பட்டிருந்த இப்போட்டித் தொடரானது, கடந்த 20 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீரர்கள் போதியளவு பயிற்சிகளில் ஈடுபட முடியாதிருந்தது.
இதன் காரணமாக, இப்போட்டித் தொடரை ஆரம்பிப்பதற்கு ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்தது.
இதன்படி இப்போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் சகல அணிகளும் தத்தம் குழுவில் இடம்பிடித்துள்ள அணியொன்றை எதிர்த்தாடவுள்ளது.