Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home கட்டுரை விக்கிலீக்ஸ் வழக்கை அமெரிக்கா கைவிடுமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

விக்கிலீக்ஸ் வழக்கை அமெரிக்கா கைவிடுமா? | ஐங்கரன் விக்கினேஸ்வரா

3 minutes read

நாடுகடத்தலுக்கு பிரிட்டன் நீதுமன்று எதிர்ப்பு?
——————————————————
– ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஜூலியன் அசாஞ்சே மீதான வழக்கை கைவிடுவது குறித்து அமெரிக்கா தற்போது பரிசீலித்து வருகிறது என அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா கோரிக்கை:

விக்கிலீக்ஸ் நிறுவனர் 52 வயதான ஜூலியன் அசாஞ்சேக்கு எதிரான உளவு குற்றச்சாட்டை கைவிட வேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் கோரிக்கையை வெள்ளை மாளிகை பரிசீலித்து வருவதாக அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

இரகசிய இராணுவ ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டினை அசாஞ்சே பத்திரிகை – கருத்துச் சுதந்திரசெயல் என்று அவர் கூறுகிறார்.

இவ்வருட பெப்ரவரியில், அவுஸ்திரேலியாவின் பிரதம மந்திரி அந்தோனி அல்பானீஸ் ஆதரவுடன், அசாஞ்சே தனது சொந்த தாய்நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்து ஒரு பிரேரணையை முன்வைத்தது.

இவ்வாரம் அமெரிக்காவில் அசாஞ்ஜின் வழக்கை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவுஸ்திரேலியாவின் கோரிக்கைக்கு அவரிடம் பதில் இருக்கிறதா என்று ஒரு பத்திரிகையாளர் பைடனிடம் கேட்டார்.
“நாங்கள் அதை பரிசீலித்து வருகிறோம்,” என்று அவர் பதிலளித்தார்.

இது குறித்து அசாஞ்சேவின் மனைவி ஸ்டெல்லா அமெரிக்க ஜனாதிபதியின் வார்த்தைகளின் படி, நேர்மையானதை சரியானதைச் செய்ய வேண்டும் என்று பைடனை வலியுறுத்தி உள்ளார்.

சுயாதீன கருத்துச் சுதந்திரம்:

இரகசியம் என்று அரசுகளால் அறிவிக்கப்படும் கோப்புகளிலிருந்து தகவல்களைப் பெற்று வெளியிடும் பத்திரிகையாளர்களின் முயற்சிகளுக்குப் பெரிய தடையாக அமைவது போலியான குற்றச் சாட்டுக்களும் அடக்குமுறைகளுமே. சுயாதீன கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டு, ஜூலியன் அசாஞ்சே
நாடு கடத்தப்பட்டால், விசிலூதிகளுக்கு என்ன பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகும்.

2012களில் உலகரசியலில் அதிர்வை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவாரா எனும் கேள்விக்கு
பிரிட்டிஷ் நீதிமன்றம் கடந்த வாரம் மார்ச் 27 இல் தீர்ப்பு அளித்துள்ளது.

நாடுகடத்தலுக்கு பிரிட்டன் எதிர்ப்பு?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அமெரிக்க அரசு உத்தரவாதம் அளிக்குமா என பிரிட்டிஷ் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க நீதிபதி டேமி விக்டோரியா ஷார்ப் உத்தரவிட்டுள்ளார்.

மேற்குலகின் அட்டூழியங்களையும், அத்துமீறல்களை வெளிப்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே. அவரின் மீதான கைதானது, அமெரிக்க அரசின் செயற்பாடு ஊடக கருத்துச் சுதந்திர மீறலாகவும் கருதலாம். ஆயினும் மேற்குலகின் அரச ரகசியங்களை காட்டிக் கொடுத்தவர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

ஈராக் போரில் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த நிருபர் கொல்லப்பட்டது உள்பட பல தகவல்கள் ஜூலியன் அசாஞ்சே (Julian Assange) வெளியிட்ட ஆவணங்களில் இருந்தன.
இவற்றில் பல விஷயங்கள் ஆட்சியாளர்களின் அத்துமீறல்களையே வெளிக்கொணர்ந்தன.

இரகசியம் என்று அரசுகளால் அறிவிக்கப்படும் கோப்புகளிலிருந்து தகவல்களைப் பெற்று வெளியிடும் பத்திரிகையாளர்களின் முயற்சிகளுக்குப் பெரிய தடையாக அமைவது போலியான குற்றச் சாட்டுக்களும் அடக்குமுறைகளுமே.

ஜனநாயக விழுமியங்களுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும்கூட அப்பாற்பட்டு அரசு எனும் அமைப்பை மோசமாகக் கையாளும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் ஊடகர்களுக்கு என்ன வகையான சட்டபூர்வப் பாதுகாப்பு உலகில் உள்ளது ?

பாக்தாத்தில் அமெரிக்கா தாக்குதல்:

அமெரிக்க ராணுவம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடத்திய தாக்குதல் தொடர்பான பல ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளத்தில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியிட்டார் அதன் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே. இதனால் உடனடியாக விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை அமெரிக்கா தொடங்கியது.

உடனடியாக விக்கிலீக்ஸ் மீது குற்ற விசாரணையை வேறு முனையில் திசை திருப்பி அமெரிக்கா தொடங்கியது. இங்கிலாந்தில் இருந்த ஜூலியன் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அவருக்கு கைது வாரன்ட்டை சுவீடன் அரசு மூலம் பிறப்பித்தது. இது அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் முயற்சி என ஜூலியன் அசாஞ்சே குற்றம்சாட்டினர்.

அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலகம் மற்றவர்களுடன் வைத்திருந்த தொடர்பு, மின்னஞ்சல் தொடர்பு அனைத்தையும் அசாஞ்சே பொதுவெளியில் வெளியிட்டார். இதனால் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்படலாம் என பிரிட்டன் அரசு முன்பு தெரிவித்திருந்தது.

ஆயினும் இந்த நீண்ட கால வழக்கில் தோல்வியைச் சந்தித்த ஜூலியன் அசாஞ்சே ஜாமீன் விதிமுறைகளை மீறி, லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சம் அடைந்தார். 2019-ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட அடைக்கலத்தை ஈக்குவடார் அரசு வாபஸ் பெற்றது. அதன்பின் ஜூலியன் அசாஞ்சேவை இங்கிலாந்து போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர்.

மேற்குலக அரசுகளை உளவுபார்த்தவர்

மேற்குலக அரசுகள் மீது உளவு பார்த்ததாக ஜூலியன் அசாஞ்சே மீது 17 குற்றச்சாட்டுகள் உள்ளதால் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்தும்படி இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. அமெரிக்க சிறையின் கடுமையான சூழலைச் சந்திப்பது, தன்னை தற்கொலைக்கு தூண்டும் என ஜூலியன் அசாஞ்சே தரப்பில் கூறப்பட்டதால், முதலில் அமெரிக்காவின் கோரிக்கையை லண்டன் நீதிமன்றம் நிராகரித்ததும் அறிந்ததே.

இந்த நிலையில், கடந்தசில மாதங்கள் முன்பாக ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு விசாரணைக்காக நாடு கடத்தப்பட இருக்கிறார் என்று பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தெரிவித்திருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் பிறந்தவர் :

அவுஸ்திரேலியாவில் பிறந்தவரான அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 2012-ல் தஞ்சம் புகுந்த பின், இராணுவ அரச ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முதலில் அவரை சுவீடனிலும் பிறகு அமெரிக்காவிலும் விசாரிக்க முற்பட்டனர். பின்னர், சுவீடன் அரசு தனது வழக்கைக் கைவிட்டுவிட்டது.

ஜூலியன் அசாஞ்சே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறார் என்று அவருடைய வழக்குரைஞர் தெரிவித்திருப்பதும், அவருடைய உடல்நலம் குன்றிக் கொண்டேவருவதும் ஜனநாயகத்துக்காக இப்படிச் செயலாற்றும் விசிலூதிகளின் (Whistle Blowers) பாதுகாப்பு தொடர்பாக தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே நவீன சமூகத்தின் நாகரிக எல்லைகளின் போதாமையையும் இது சுட்டிக்காட்டுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More