Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் அவுஸ்ரேலியாவுக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது

அவுஸ்ரேலியாவுக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது

1 minutes read

அவுஸ்ரேலியாவுக்குள் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாது என அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளுக்குச் சென்று, திரும்பி வர முடியாத நிலையிலுள்ள அவுஸ்ரேலியர்களை திரும்ப அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

துகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவல் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை வாரத்துக்கு நான்காயிரத்தை கடக்க கூடாது என்று தற்போதுள்ள கட்டுப்பாட்டைத் தொடர அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

எனவே, அந்த உச்சவரம்பு தளர்த்தப்படாது. இன்னும் இரு வாரங்களுக்கு பிறகு இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படும். அப்போது, வாரந்தோறும் அனுமதிக்கப்படும் வெளிநாட்டுப் பயணிகளின் அதிகபட்ச எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று நம்புகிறேன்’ என கூறினார்.

அவுஸ்ரேலியாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 24,602பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 485பேர் உயிரிழந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More