ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக கிரம்ளின் தெரிவித்துள்ளது.
அத்துடன், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அவரது அடுக்குமாடி குடியிருப்பும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கிரா யர்மிஷ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி, நச்சுத் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிய ஒருநாளுக்கு பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது.
ரஷ்ய தலைநகரான மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள அவரது மூன்று படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உட்பட ஒகஸ்ட் 27ஆம் திகதி எதிர்க்கட்சி ஆர்வலரின் சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக யர்மிஷ் கூறினார்.
‘இதன் பொருள் அடுக்குமாடி குடியிருப்பை விற்கவோ, நன்கொடையாகவோ அல்லது அடமானம் வைக்கவோ முடியாது’ என யர்மிஷ் டுவிட்டரில் வெளியிட்ட காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னி உடற்தகுதி பெற்று திரும்புவதற்கு குறைந்தது ஒரு மாதமாவது ஆகும் என அவரை சிகிச்சைக்காக ஜேர்மனிக்கு அழைத்து வர உதவிய ஆர்வலர் கூறினார்.
ரஷ்யாவுக்கு திரும்பி அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார் என்பது தெளிவாகிறது.
பெர்லின் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னர் புதன்கிழமை நவல்னி தனது முதல் பொது தோற்றத்தை வெளிப்படுத்தினார்,