உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 4 கோடியைக் கடந்தது.
இதுகுறித்து வலைதள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 1.16 இலட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 40,281,080 யாக உயா்ந்துள்ளது.
உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 8,387,799 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவில் 7,550,273 போ் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
சற்று முன்னர் வரை உலகம் முழுவதும் 1,118,326 போ் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளனா். பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 224,730 போ் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா் என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.