Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

மெக்ஸிகோவில் அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகளின் துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் பலி

1 minutes read

மெக்ஸிகோவின் மேற்கு மாநிலமான ஜாலிஸ்கோவில் லொறியொன்றில் சென்ற அடையாளம் தெரியாத துப்பாக்கி தாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவம் காரணமாக மேலும் ஒரு பெண்ணுக்கும் இளைஞருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜாலிஸ்கோவின், குவாதலஜாரா பகுதியில் உள்ள நகராட்சியான டோனாலாவில் அமைந்துள்ள ஒரு வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 10 பேர் இறந்து கிடந்ததாக அந் நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த இளைஞரும், யுவதியும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தனது அறிக்கையில் சுட்க்காட்டியுள்ளது.

எனினும் இது தொடர்பான ஏனைய விபரங்களை உடனடியாக வெளியிடவில்லை.

ஜனாதிபதி ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பதவியேற்றார், வன்முறையை குறைப்பதாக உறுதியளித்தார். எனினும் மெக்ஸிகோவில் வெகுஜன படுகொலைகளும் பல்லாயிரக்கணக்கான படுகொலைகளும் தொடர்ந்தும் அரங்கேறிய வண்ணமே உள்ளது.

2020 டிசம்பரில், முன்னாள் ஜலிஸ்கோ ஆளுனர் அரிஸ்டோடெல்ஸ் சாண்டோவால் கடற்கரை நகரமான புவேர்ட்டோ வல்லார்ட்டாவில் உள்ள ஒரு உணவகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டமையும் பிரதான விடயமாகும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More