Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தஜிகிஸ்தானுடனான எல்லை மோதலில் மூன்று கிர்கிஸ் வீரர்கள் பலி

தஜிகிஸ்தானுடனான எல்லை மோதலில் மூன்று கிர்கிஸ் வீரர்கள் பலி

1 minutes read

தஜிகிஸ்தானுடனான எல்லை மோதலில் மூன்று கிர்கிஸ்தான் எல்லை ரோந்து முகவர்கள் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக கிர்கிஸ் தேசிய பாதுகாப்புக் குழுவின் அரச எல்லைக் காவலர் சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

“தேசிய பாதுகாப்புக் குழுவின் அரச எல்லைக் காவல்படை சேவையின் போரு சிறப்புப் படையின் மூன்று படைவீரர்கள் தாஜிக் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப்பட்டனர்.

அது மாத்திரமன்றி 22 படைவீரர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது” என்று கிர்கிஸ் அரச காவலர் சேவை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு பணியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More