தஜிகிஸ்தானுடனான எல்லை மோதலில் மூன்று கிர்கிஸ்தான் எல்லை ரோந்து முகவர்கள் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்துள்ளதாக கிர்கிஸ் தேசிய பாதுகாப்புக் குழுவின் அரச எல்லைக் காவலர் சேவை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
“தேசிய பாதுகாப்புக் குழுவின் அரச எல்லைக் காவல்படை சேவையின் போரு சிறப்புப் படையின் மூன்று படைவீரர்கள் தாஜிக் தரப்புடன் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப்பட்டனர்.
அது மாத்திரமன்றி 22 படைவீரர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது” என்று கிர்கிஸ் அரச காவலர் சேவை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கு பணியாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.