Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் விஷவாயு கசிவினால் 121 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு | ஆந்திராவில் சம்பவம்

விஷவாயு கசிவினால் 121 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு | ஆந்திராவில் சம்பவம்

1 minutes read

இந்தியாவின் ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று (02) இரவு ஏற்பட்ட விஷவாயு கசிவினால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, விதைகளை உற்பத்தி செய்யும் குறித்த நிறுவனத்தை மறு அறிவித்தல் வரும்வரை மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலை 6.45 மணி முதல் 7.30 மணி வரையான காலப்பகுதியினுள் 121 பெண் தொழிலாளர்களுக்கு மயக்கநிலை ஏற்பட்முள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே தொழிற்சாலையில் இதே போன்ற சம்பவம் நடந்தது என தொழிலாளர்கள் கூறிவுள்ளனர்.

மீண்டும் இதே போன்ற அறிகுறிகள் தொழிலாளர்கள் மத்தியில் பதிவாகியதால் அவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் உடல் நிலை சீராகவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, உண்மைகள் கண்டறியப்படும் வரை தொழிற்சாலையை மூட உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More