கியூபாவில் ஏற்பட்ட மின்சாரத் தடை காரணமாக அந்த நாடு முழுவதிலும் அலைபேசி மற்றும் இணையச் சேவை தடைப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச தொலைத்தொடர்பு நிறுவனமான Etecsa தெரிவிக்கின்றது.
நேற்றிரவு ஏற்பட்ட இந்தப் பிரச்சினையை சரிசெய்து நிலைமையை வழமைக்கு கொண்டுவரும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நேற்றிரவு 7 மணியிலிருந்து, அழைப்பு, குறுந்தகவல் மற்றும் இணையச் சேவைகள் தடைபட்டதையடுத்து, பவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவசரச் சேவைகளுடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கமாகுவே மாநிலத்திலுள்ள பயனர் ஒருவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சேவை தடையினை அடுத்து, சமூக ஊடகத் தளங்களில் அந்நாட்டு மக்களின் செயல்பாடுகளும் பெரிய அளவில் குறைந்திருப்பதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
கியூபாவில் அலைபேசி மற்றும் இணைய பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போவதால் தனது கட்டமைப்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக Etecsa நிறுவனம் அண்மையில் தகவல் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.