இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நேற்று (16) சந்தித்துக் கொண்டுள்ளனர்.
இதுவொரு நல்ல கலந்துரையாடல் சந்திப்பாக அமைந்ததாக உக்ரைன் ஜனாதிபதி, தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் பாருங்க : ரஷ்யா-உக்ரைன் போரை தனி ஆளாக நிறுத்துவேன்!
சமீபத்திய சர்வதேச நிகழ்வுகள் பற்றிய கருத்துகளை இதன்போது பரிமாறிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “எப்போதும் போலவே உக்ரைனுக்கான பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஆதரவை அதிகரிப்பதில் உறுதியான முடிவுகள் எங்களிடம் உள்ளன. பிரித்தானியாவின் அசைக்க முடியாத நிலையைப் பாராட்டுகிறேன்” என்னும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
A good conversation with 🇬🇧 PM @RishiSunak. I informed him of the situation at the front, Bakhmut's defense. Exchanged views on recent international events. As always, we have concrete results in increasing defense & economic support for 🇺🇦. Appreciate 🇬🇧's unwavering position!
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) March 16, 2023