பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான் தலைமையிலான அரசாங்கம் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 2 நம்பிக்கையில்லா பிரேரணைகளும் தோல்வி அடைந்துள்ளன.
பிரான்ஸ் பாராளுமன்றத்தில் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ஓய்வூதிய சீர்திருத்த சட்டமூலம் அந்நாட்டு அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 62ல் இருந்து 64ஆக மாற்றுக்கின்றது.
இதனையடுத்து, குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரச ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அத்துடன், குறித்த சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தன.
மத்தியவாத லியாட் கூட்டணி சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 278 பேர் மாத்திரமே வாக்களித்தனர். பிரேரணையை நிறைவேற்ற 287 வாக்குகள் தேவை என்ற நிலையில் 9 வாக்குகள் குறைவாக இருந்தது.
இதனால் குறித்த பிரேரணை தோல்வியை தழுவியது.
இதனையடுத்து, ‘ஃபார்ரைட் நேஷனல் ராலி சார்பில் கொண்டு வரப்பட்ட 2ஆவது நம்பிக்கை இல்லாத் தீர்மானமும் தோல்வி அடைந்தது.