Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மீண்டும் தலைதூக்கிய பறவை காய்ச்சல்

மீண்டும் தலைதூக்கிய பறவை காய்ச்சல்

0 minutes read

ஜப்பானின் மீண்டும் பறவை காய்ச்சல் பரவ ஆரம்பித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஹொக்கைடோ மாகாணத்திலுள்ள ஒரு கோழிப் பண்ணையில் நேற்று முன்தினம் கோழிகள் பல இறந்தன.

அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அக் கோழிகள் பறவைக் காய்ச்சலால் இறந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

ஜப்பானின் பல்வேறு மாகாணங்களில் கடந்தாண்டு இறுதியில் பறவைக் காய்ச்சல் பரவியது. நாட்டிலுள்ள 47 மாகாணங்களில் 26 மாகாணங்களில் இவ்வாறு பறவை காய்ச்சல் பரவியிருந்தது.

இதனால், கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் ஜப்பானில் 1 கோடியே 65 லட்சத்துக்கும் அதிகமான கோழிகள் அழிக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளமையால், மேற்படி பண்ணையில் உள்ள சுமார் 5 இலட்சத்து 58 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More