Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா

இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா

1 minutes read

இளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் ஹரியையும் மேர்கனையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என வர்ணித்துள்ளார்.

நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள நிலையிலேயே இளவரசி டயனாவின் போல் பரல் ஹரியையும் மேர்கனையும் இவ்வாறு வர்ணித்துள்ளார்.

வில்லியமின் ஏர்த்சொட் திட்டத்தில் ஜெசிந்தா ஆர்டென் இணைந்துகொண்டுள்ளார்.

இளவரசர் வில்லியமின் சூழல் தொடர்பான திட்டத்திலேயே ஜெசிந்தா ஆர்டென் இணைந்துகொண்டுள்ளார்.

சிலமாதங்களிற்கு முன்னர் ஹரி மேர்கன் தொடர்பான நெட்பிலிக்ஸ் தொடரில் இருந்து தன்னை ஜெசிந்தா விலக்கிக்கொண்டிருந்தார்.

இந்த தொடரில் ஜெசிந்தா தோன்றியிருந்தார்.

இதனை தொடர்ந்து  ஹரிதம்பதியினரை  புறக்கணித்துவிட்டு இளவரசர் வில்லியமுடன் ஜெசிந்தா இணைந்துள்ளமை குறித்து டயனாவின் சமையல் உதவியாள போல்பரல் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

ஹரி தம்பதியினரின் உலகம் நச்சுத்தன்மை மிக்கதாக மாறிவருவதை ஜெசிந்தா உணர்ந்துள்ளார்.அவர்கள் வெறுமனே பிரபலங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் உலகிற்கான தூதுவர்கள் இல்லை வில்லியம் கேட்டே தூதுவர்கள் என தெரிவித்துள்ள போல் பரல் இரண்டு தம்பதியினருக்கும் இடையிலான வித்தியாசத்தை பாருங்கள் ஒருவர் பிரிட்டனிற்காக தீவிரமாக பாடுபடுகின்றார் மற்றையவர் பிரபலமாக செல்வந்தராக முயல்கின்றார் என போல்பரல் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ஜெசிந்தா தொலைநோக்குடன் செயற்படுகின்றார் வில்லியம் கேட்டிற்கு எவ்வாறு உதவலாம் என சிந்திக்கின்றார் இது சிறந்த விடயம் என போல்பரல் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More