Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

0 minutes read

இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று (23) அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி, வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

அதன் பின்னர் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More