சீனாவுடனான எல்லைப்பிரச்சனை நடைப்பெற்று வரும் நிலையில் இந்தியாவின் பேச்சுவார்த்தை முயற்சிகள் பல முறை தோல்வியிலேயே சென்றடைந்துள்ளது.
நேற்றைய தினம் தீராத எல்லை பிரச்சனைகள் சார்பாக தீர்வு காணும் வகையில் இந்தியா சீனா ராணுவ கொமாண்டர்களுக்கு இடையில் 18 வைத்து சுற்று பேச்சுவார்த்தை நடைப்பெற்றது.
எல்லை பிரச்சனையில் படைகளை குறைக்க வேண்டும் என்று 3 ஆண்டுகளாக இந்தியா கோரிக்கைகளை விடுத்த போதிலும் அதற்கான சரியான நடைமுறைகளை சீனா பக்கத்தில் இருந்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவை இப்படியிருக்கும் நிலையில் தான் 5 மாதங்களுக்கு முன்னும் இப்படியானதொரு பேச்சுவார்த்தை நடைப்பெற்றது . எனினும் ராணுவம் சாலை அமைப்பதிலும் இராணுவ தளபாடங்களை மேலும் அதிகரிக்கவும் இராணுவ வீரர்களை கூட்டாவே முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
சீனா ராணுவத்திடம் இந்தியா ஒரு கோரிக்கையை முன்வைத்தது .அது டெப்சாங்,டெம்சோக் போன்ற மலைப் பகுதியில் சீனப்படைகளை நீக்க வேண்டும் என்பதே ஆகும். ஆயினும் அந்த கோரிக்கையை சீனா அலட்சியப்படுத்தியுள்ளது.