சீனா 5 நாட்கள் விடுமுறையை அறிவித்த நிலையில் திடீர் என்று 5 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயணத்தை செய்துள்ளதாக சீனா போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரு ஆண்டிலும் இல்லாத அளவுக்கு இம்முறை இந்த மாதம் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புகையிரதம் , கப்பல், சாலைபோக்குவரத்து விமானம் என அனைத்து விதமான போக்குவரத்து துறையிலும் அதிகரிப்பு காட்டப்பட்டுள்ளது. 151.8 % அதிகரிப்பு நடை பெற்றுள்ளது.
குறிப்பாக தெற்கு சீனா குவாங்கடங் மாகாணத்தில் சென்சேன் வடக்கு ரயில் நிலைத்தில் 288000 பயணிகள் பயணம் மேற்கொண்டனர் என அரசு போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது .