தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று மாலை திருப்பதி மலைக்கு சென்று தரிசனம் பெற்றார். அவருக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், பூங்கொத்துடன் வரவேற்புக் கொடுத்தனர்.
இதையடுத்து, புஷ்கரணி அருகே உள்ள வராக சாமி கோவில் மற்றும் மாட வீதியில் உள்ள ஹயக்ரீவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து நேற்று இரவு தேவஸ்தான விடுதியில் தங்கினார். இன்று காலை 10 மணிக்கு வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி கௌரவித்தனர்.
இதையடுத்து கார் மூலம் வேலூர் வழியாக சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார். இதன்போது வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.