கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய 7 நாடுகள் அங்கம் வகிக்கும் ‘ஜி-7 ‘ அமைப்பின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரில் இன்று (19) ஆரம்பமாகின்றது.
தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிற இந்த மாநாடு, எதிர்வரும் 21ஆம் திகதி முடிவடைகிறது.
இந்த ‘ஜி-7’ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜோ பைடன், ரிஷி சுனக் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜப்பான் – ஹிரோஷிமாவில் குவிந்துள்ளனர்.
இதனையடுத்து, ஹிரோஷிமா நகரம், பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் 7 உறுப்பு நாடுகளுடன் இந்தியா, தென்கொரியா, ஆஸ்திரேலியா, பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொமோரோஸ் மற்றும் குக் தீவு ஆகிய 7 நாடுகளும் விசேட அழைப்பின்பேரில் கலந்துகொள்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனையும், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கையும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
‘ஜி-7’ உச்சிமாநாட்டின்போது, அணுசக்தி பெருக்கத்தின் அபாயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா பிரச்சினை எழுப்பி, விவாதிக்க வழிவகுப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.