இங்கிலாந்தின் Bournemouth கடற்கரை பகுதியில் 17 வயதுடைய சிறுவனும், 12 வயதுடைய சிறுமியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 40 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என டோர்செட் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று புதன்கிழமை மாலை 4.32 மணிக்கு அம்பியுலன்ஸ் சேவையில் இருந்து வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர்.
மோசமான காயங்களுக்கு உள்ளாகியிருந்த 17 வயதுச் சிறுவனும், 12 வயதுச் சிறுமியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.