Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 31 பேர் மரணம்

தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்து 31 பேர் மரணம்

1 minutes read

தென் ஆப்பிரிக்காவின் ப்ரீஸ்டேட் மாகாணத்தில் தங்க எடுப்பதற்காக தோண்டப்பட்ட சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது.

இந்த இடிபாடுகளில் சிக்கி 31 தொழிலாளர்கள் மரணித்தள்ளதுடன் பலர் காயமடைந்தனர்.

முன்னதாக இந்தச் சம்பவம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், “ப்ரீஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச் சுரங்கத்தின் செயல்பாடு கடந்த 1990களில் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த கனிம வளங்கள் தீா்ந்துவிட்டதால் அது மூடப்பட்டது.

“இந்த சுரங்கத்தில் அவ்வப்போது சட்டவிரோதமாக கனிம படிவங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சட்டவிரோத சுரங்கப் பணியின் போது எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்தினால் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

“இந்தச் சம்பவம் தொடர்பாக 16 பேர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளள. விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தென்ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அந்நாட்டு அரசாங்கம் மூடி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More