Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா தக்காளியை பாதுகாக்க மெய்க் காப்பாளர்கள் நியமனம்!

தக்காளியை பாதுகாக்க மெய்க் காப்பாளர்கள் நியமனம்!

0 minutes read

இந்தியாவில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இது சமூக வலைத்தளங்களிலும் போசுபொருளாகியுள்ளது. ஆப்பிளின் விலையை விட தக்களி விலை அதிகரித்துள்ளதாக சாடப்படுகிறது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான வாரணாசியில் தனது கடையில் உள்ள தக்காளிகளை பாதுகாப்புக்காக இரண்டு மெய்க்காப்பாளர்களை வியாபாரி ஒருவர் வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

வாரணாசியின் லங்கா பகுதியில் உள்ள மளிகைக் கடை உரிமையாளரும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தொண்டருமான அஜய் ஃபௌஜி என்பரே, தனது கடையில் தக்காளிகளை ‘பாதுகாக்க’ இரண்டு தொழில்முறை மெய்க்காப்பாளர்களை (Bodyguards) நியமித்துள்ளார்.

தக்காளி விலையில் பேரம் பேசும் போது வாங்குபவர்கள் ஆக்ரோஷமாக வருவதைத் தடுக்கவே இவ்வாறு செய்ததாக ஃபௌஜி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More