அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.
அதில் போட்டியிட விரும்பும் மற்றவர்களை விடத் தமக்குப் பெரும் ஆதரவு இருப்பது அண்மைய கருத்துக் கணிப்பில் தெரியவந்திருப்பதை முன்னாள் ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விவாதத்தில் தான் பங்கேற்கப் போவதில்லை என்பதை டிரம்ப் தற்போது உறுதி செய்திருக்கின்றார்.
தான் யார் என்பதும் வெற்றிகரமான ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்ததும் மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.
குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கலந்துகொள்ளும் முதல் விவாதம், நாளை மறுதினம் (ஆகஸ்ட் 23) நடைபெறவுள்ளது.
அதற்கு அடுத்த நாள் இரண்டாவது விவாதம் நடைபெறும்.
எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைந்தது 2 விவாதங்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.