Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா இங்கிலாந்து இளைஞன் தாய்லந்தில் மரணம்

இங்கிலாந்து இளைஞன் தாய்லந்தில் மரணம்

0 minutes read

தாய்லந்தின் பட்டாயா நகரில் (Pattaya) பாராசூட் (parachute) மூலம் கட்டடத்திலிருந்து குதித்த இங்கிலாந்து இளைஞன் ஒருவர் மரணித்துள்ளார்.

33 வயதான குறித்த இளைஞன் 29 மாடிக் கட்டடத்திலிருந்து குதித்த போது அவரின் பாராசூட் திறக்கத் தவறியதாக BBC தகவல் வெளியிட்டுள்ளது.

அவர் மரத்தில் மோதித் தரையில் விழுந்ததைக் கண்டு, அங்கிருந்தவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞனின் சமூக ஊடகப் பக்கங்கள் அவர் அனுபவமிக்க பாராசூட் சாகசக்காரர் எனக் கூறுகின்றன.

இளைஞன் மீது நீலநிற பாராசூட் இருந்ததாக பொலிஸார் கூறினர்.

இளைஞனின் நண்பர்கள் அவர் செய்யவிருந்த சாகசத்தைக் காணொளியாகப் பதிவுசெய்ததாகவும் BBC செய்தி வெளியிட்டுள்ளது.

மரணித்த இளைஞனின் குடும்பத்துக்கு உதவி வருவதாகத் தாய்லந்து வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More