சீனாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருவதாகக் கூறப்படும் நிலையிலும், சீன அரசாங்கம் அந்நாட்டு இராணுவ வீரர்களுக்கான நிதித் தொகையை 7.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்து மிக பெரிய இராணுவ தொகையை கொண்ட நாடாக சீனா உள்ளது.
சீனாவின் இராணுவ தரைப்படையில் 20 இலட்சம் வீரர்கள் உள்ளனர்.
இதனால், சீனாவின் இராணுவ நிதித்தொகை $230 பில்லியனுக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இந்த தொகை, இந்தியாவின் இராணுவ பட்ஜெட் தொகையை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.
இந்திய கடல் (Indian Ocean) பகுதியில் இராணுவ மற்றும் அணு ஆயுத கட்டமைப்பை அதிகரிக்கும் நோக்கில், சீனா எடுத்திருக்கும் முடிவை இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு லடாக் (eastern Ladakh) பகுதியில் ஏற்பட்ட சச்சரவு தொடங்கி 4 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.