Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் துப்பாக்கியை பதுக்கி வைத்த நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

துப்பாக்கியை பதுக்கி வைத்த நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

0 minutes read

தெற்கு இலண்டனில் உள்ள வீடு ஒன்றில், துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த ஒருவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

லாம்பெத்தில் உள்ள வீட்டில் போதைப்பொருள் மற்றும் ஆறு ஆயுதங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்

குழந்தைகள் அறைகள் உட்பட வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருட்களையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

துல்ஸ் ஹில்லைச் சேர்ந்த 45 வயதான டேனி பட்லர், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆறு துப்பாக்கிகளை வைத்திருந்தமை, வெடிமருந்துகளை வைத்திருந்தமை, விநியோகிக்கும் நோக்கில் ஏ மற்றும் பி வகை போதைப்பொருட்களை வைத்திருந்ததற்காக 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

திங்கட்கிழமை குரோய்டன் கிரவுன் நீதிமன்றத்தில் குறித்த நபருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தெற்கு இலண்டனில் குழு வன்முறைக்கு காரணமானவர்களை குறிவைத்து மெட் பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More