பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் இன்று. இதற்காக சுமார் 106 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கானின் பி.டி.ஐ. கட்சிக்கும், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப்பின் பி.எம்.எல்.-என் கட்சிக்கும் இடையிலான கடும் போட்டியாக இந்த தேர்தல் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் பாரிய மோசடிகள் இடம்பெற வாய்ப்புகள் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகவுள்ளன.
272 தேசிய சபை ஆசனங்களுக்கான வாக்குப்பதிவுகள் நேரடியாக இடம்பெறுவதுடன், எஞ்சிய 70 ஆசனங்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினருக்காக விகிதாசார அடிப்படையில் ஒதுக்கப்படும். 2013ம் ஆண்டு இடம்பெற்ற வாக்குப்பதிவில் 55 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.