நாளுக்கு நாள் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றனர்.இந்நிலையில் பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்நிகழ்வானது பங்களாதேஷின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில்இடம்பெற்றுள்ளது.
சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும் டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும்நேருக்கு நேர் மோதிக்கொண்டதால்15 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 60 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அதிகாலை நேரம் என்பதால் தூங்கிக்கொண்டிருந்த பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.