தற்பொழுது ஆசியாவின் பல பகுதியில் காற்றானது மாசடைந்து வரும் சந்தர்ப்பத்தில் உலகில் காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட 10 நகரங்களும் ஆசிய கண்டத்தில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்கைமெட் நிறுவனம் வௌியிட்ட புதிய ஆய்வறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், இந்திய தலைநகரமான புதுடில்லி காற்று மாசினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள நகரமாக பதிவாகியுள்ளதுடன்புதுடில்லியின் காற்று மாசு செறிவுச் சுட்டி 527 ஆபத்தான நிலை எனவும் இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லியில் அதிகரித்துள்ள காற்று மாசின் விளைவாக கடந்த செவ்வாய்க்கிழமை, 2 நாட்களுக்கு அங்குள்ள பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.