கொரானா வைரஸ் குறித்து உலக நாடுகள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய தருணம் என்று, உலக சுதாகார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
சீனாவைத் தொடர்ந்து, 28 நாடுகளுக்கு கொரலானா வைரஸ் பரவிய நிலையில், தற்போது, தென்கொரியா, இத்தாலி, ஈரான், சிங்கப்பூரில் தனது வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு, அழையா விருந்தாளியாக, கொரானா கதவை தட்டும் ஆபத்து உள்ளதால், மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு, உலக நாடுகளை எச்சரித்திருக்கிறது.
சீனாவில், தற்போது, கொரானா பாதிப்பு வலுவடையும் சூழலில், அதன் தாக்கம், உலக நாடுகளிலும், கடுமையாகவே எதிரொலிக்கும் ஆபத்து உள்ளதாக, உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கிறது.