சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு அதிபர் ஜி ஜின்பிங்கின் மோசமான செயல்பாடுகளே காரணம் என சட்டப் பேராசிரியர் ஜூ ஜாங்ரூன் விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார். மேலும் சீன அதிபர் நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பை குலைத்து வருவதாகவும் எழுதிய அவர், பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தார்.
இதன் காரணமாக தலைநகர் பெய்ஜிங்கின் புறநகரில் வசித்து அவர், தனது வீட்டில் இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்தத் தகவலை ஜூ ஜாங்ரூனின் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனால், சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், கைது குறித்து தனக்கு எந்த தகவலும் இல்லை என்று கூறினார்.