நீட்தேர்வை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (புதன்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து எதிர்வரும் 13 ஆம் திகதி குறித்த தேர்வு திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு தொடர்ந்து நடைபெறும் என்றும் நீட் தேர்வு விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.