இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் நேற்று (புதன்கிழமை) 78 ஆயிரத்து 809 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 68 இலட்சத்து 32 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 963 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 5 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 58 இலட்சத்து 24 ஆயிரமாக அதிகரித்துள்ள அதேவேளை 9 இலட்சத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.