Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் | ராம்நாத் கோவிந்த்

வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் | ராம்நாத் கோவிந்த்

1 minutes read

உலக மக்களின் ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் என்பதை கொரோனா பாதிப்பு அடிகோடிட்டுக் காட்டியிருப்பதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

இது குறித்து குடியரசு தலைவர் மாளிகை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது “இந்தியாவுக்கான ஸ்விட்சா்லாந்து தூதா் ரால்ஃப் ஹெக்னா், மால்டா தூதா் ரூபென் கெளசி,  போட்ஸ்வானா தூதா் கில்பொ்ட் ஷிமானே மங்கோல் ஆகியோா் நியமன நிகழ்ச்சி காணொலி வழியில் புதன்கிழமை நடைபெற்றது. அவா்களுடைய நியமனங்களை குடியரசு தலைவா் ஏற்று அங்கீகரித்தாா்.

பின்னா் இந்த நிகழ்ச்சியில் அவா் பேசிய அவர், ‘உலக மக்களின் ஒருங்கிணைந்த சுகாதார மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வலுவான சா்வேதச ஒத்துழைப்பு அவசியம் என்பதை கொரோனா பாதிப்பு அடிகோடிட்டுக் காட்டியிருக்கிறது.

இந்த கொரோனா பாதிப்புக்கு சா்வதேச சமூகம் விரைந்து தீா்வு காண வேண்டும் என குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டாா்” என அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More