இந்தியா,அமெரிக்கா, அவுஸ்ரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகளின் கூட்டு கடற்படைப் போர்ப் பயிற்சி கோவா கடற்பகுதியில் நடைபெறவுள்ளது.
குறித்த கூட்டு கடற்படைப் போர்ப் பயிற்சி எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா சார்பில் மிக் போர் விமானங்களைக் கொண்ட விக்ரமாதித்யா விமானந்தாங்கிக் கப்பல் பங்கேற்க உள்ளது.
அதேபோன்று அமெரிக்கக் கடற்படையில் எப் 18 வகைப் போர்விமானங்களைக் கொண்ட நிமிட்ஸ் விமானந்தாங்கிக் கப்பல் பங்கேற்க உள்ளமை குறிப்பிடத்தக்கது