எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் கூடவுள்ள தமிழக சட்டசபைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், எதிர்வரும் இந்த பட்ஜெட்டில் மக்களைக் கவரும் வகையிலான பல அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக நிதித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவற்றில் முக்கியமாக, குடும்பத் தலைவிக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற அறிவிப்பும் வெளிவர வாய்ப்புள்ளதாக தெரியவருகின்றது.