சமூக தொலைதூர விதிகளை மீறுபவர்களை மக்கள் பொலிஸில் புகாரளிக்க வேண்டும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘நான் ஒருபோதும் பதுங்கியிருக்கும் கலாச்சாரத்திற்கு ஆதரவாக இல்லை’ என்றும் பிரதமர் கூறினார்.
சமூகக் கூட்டங்களுக்கான சமீபத்திய வரம்பான ‘ரூல் ஒஃப் சிக்ஸ்’ விதியை மீறும் அண்டை வீட்டாரைப் புகாரளிக்க, பொலிஸ்துறை அமைச்சர் கிட் மால்தவுஸ் மக்களை அழைத்ததற்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ரூல் ஒஃப் சிக்ஸ்’ விதி, இந்த வாரம் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸில் நடைமுறைக்கு வந்தன. இது ஆறுக்கும் மேற்பட்ட நபர்களின் சமூகக் கூட்டங்களைத் தடைசெய்கின்றது. ஆனால் இதுவெவ்வேறு நாடுகளில் சற்று வேறுபடுகின்றது.
எடுத்துக்காட்டாக இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இந்த சட்டம் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் பொருந்தும். ஆனால் வேல்ஸில் உள்ள வீட்டுக்குள்ளேயே பொருந்தும்.
ஆறுக்கும் அதிகமான குழுக்களை உடைக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு. அதிகாரிகளை புறக்கணிக்கும் நபர்களுக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படலாம். அதிகபட்சம் 3,200 பவுண்டுகள் வரை விதிக்கப்படலாம்.