அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய சட்டங்களின் கீழ், சிறிய படகில் இங்கிலாந்துக்கு வரும் எவரும் புகலிடம் கோருவது தடுக்கப்படும்.
அந்த வழியாக இங்கிலாந்துக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி, விரைவாக அகற்றும் கடமை அமைச்சர்களுக்கு இருக்கும் என்று இங்கிலாந்து உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் கூறினார்.
“படகுகளை நிறுத்துவது தனது ஐந்து முன்னுரிமைகளில் ஒன்றாகும்” என்று பிரதமர் ஏற்கெனவே கூறியுள்ளார்.
பிரேவர்மேன் புதிய சட்டத்தை செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதை புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் வழக்கை விசாரிக்க நாட்டில் இருக்க உரிமை உள்ளதுடன், புதிய சட்டத்தின்படி, சிறிய படகுகளில் வருபவர்கள் இங்கிலாந்தில் தஞ்சம் கோருவது தடுக்கப்படும், அத்துடன், ருவாண்டா அல்லது “பாதுகாப்பான மூன்றாவது நாடு” க்கு அகற்றப்பட்டு நிரந்தரமாக திரும்புவதற்கு தடை விதிக்கப்படும்.
முன்னதாக, “தவறு செய்யாதீர்கள், நீங்கள் சட்டவிரோதமாக இங்கு வந்தால், நீங்கள் தங்க முடியாது.” என பிரதமர் ரிஷி சுனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.