Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பலாங்கொடைபகுதியில் சிறுத்தையால் மக்களுக்கு அச்சறுத்தல்!

பலாங்கொடைபகுதியில் சிறுத்தையால் மக்களுக்கு அச்சறுத்தல்!

1 minutes read

 

காணாமல் போயுள்ள பலாங்கொடை – சமனலவத்த பிரதேசத்தை சேர்ந்த 10 வயது சிறுவனை கடந்த இரண்டு தினங்களாக தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

தற்போதைய நிலையில் , இராணுவ குழுவொன்று சமனலவத்த பிரதேசத்தை நோக்கி சென்றுள்ளார்கள் 5ம் தரத்தில் கல்வி கற்கும் சிறுவன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

கடந்த 20ம் திகதி சிறுவனின் தந்தை விறகு வெட்டுவதற்காக காட்டிற்கு சென்றுள்ள நிலையில் , பின்னர் சிறுவன், தந்தை இருக்கும் இடத்திற்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து வௌியேறியுள்ளார்.

எனினும் , தந்தை விறகு வெட்டி வீடு திரும்பிய போதும் , மகன் வீடு திரும்பவில்லை. அன்றைய நாள் தொடக்கம் சிறுவன் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.

எவ்வாறாயினும் , பலாங்கொடை சமனலவத்த பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் கடந்த தினங்களில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனுக்கு சிறுத்தைகளால் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More