Wednesday, May 1, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் செம்மனி பகுதிக்கு சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை ஆரம்பம்!

யாழ் செம்மனி பகுதிக்கு சட்ட வைத்திய அதிகாரி பரிசோதனை ஆரம்பம்!

1 minutes read

 

யாழ். செம்மனி – நாயனர்மார்கட்டுப் பகுதியில் நீர்பாசன திணைக்களம் அமைத்து வரும் நிலக்கீழ் நீர் தொட்டிக்காக மண் அகழ்வினை மேற்கொண்ட போது அதில் ஓர் பகுதியில் இருந்து மனித எலும்பு எச்சங்கள் வெளிப்பட்டிருந்தன.

இம் மனித எச்சங்கள் தொடர்பாக யாழ்.பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அது தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை பொலிஸார் யாழ்.நீதிவான் நீதிமன்றில் சமர்பித்திருந்தனர்.

இதனடிப்படையில் கடந்த சனிக்கிழமை மாலை சம்பவ இடத்திற்கு சென்ற யாழ்.நீதிவான் சின்னத்துரை சதீஸ்கரன் அங்கு அகழப்பட்ட மண்ணினையும் முழுமையாக பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் சென்ற போதும் அவர் தனது பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் எதனையும் யாழ்.பொலிஸார் மேற்கொண்டிருக்கவில்லை. இதனால் மேற்கொண்டு பரிசோதனைகள் எதனையும் செய்யாது சென்றிருந்தார்.

அத்துடன் பொலிஸார் ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை என்பது தொடர்பாக நீதிமன்றுக்கும் அறிக்கை ஒன்றினூடாக தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையிலேயே இன்று சம்பவ இடத்தில் பரிசோதனைகளை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வருகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More