விவசாய அமைச்சர் தனது அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அடுத்த வாரம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரான அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அதன்போது ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் தற்போதும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. புதிய முறைமைக்குச் சென்று பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமோ என்பது தொடர்பிலும், தேர்தலை பிற்போடாது பழைய முறைமையிலேயே நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடிய பின்னர் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்