Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சூழல் பாதுகாப்புஎன்றபோர்வையில் அரசுபச்சையுத்தத்தைஆரம்பித்துள்ளது!

சூழல் பாதுகாப்புஎன்றபோர்வையில் அரசுபச்சையுத்தத்தைஆரம்பித்துள்ளது!

2 minutes read

 

தடுக்கத் தவறின் செவ்விந்தியர்களின் கதியேஎமக்கும்!!பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை கொடூரமானமுறையில் ஆயுதரீதியாகமுன்னெடுத்தயுத்தத்தைநிறுத்திக்கொண்டஅரசு இப்போதுயுத்தத்தைவேறுவடிவங்களில் முன்னெடுக்கஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்புஎன்றபோர்வையில் அரசுசத்தம் இல்லாதயுத்தம் ஒன்றைஎம்மீதுதொடுத்திருக்கிறது. வனங்களைப் பாதுகாத்தல், வன ஜீவராசிகளைப் பாதுகாத்தல் என்றுசொல்லிஏராளமாகஎமதுநிலங்களைக்கையகப்படுத்திவருகிறது. இந்தநிலஅபகரிப்பைத் தடுக்கத்தவறினால் அமெரிக்காவில் அதன் பூர்வகுடிகளானசெவ்விந்தியர்களுக்குஏற்பட்டகதியேவிரைவில் எமக்கும் ஏற்படும் என்றுதமிழ்த் தேசியப்பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்த்தேசியபசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி சபாலிங்கம் அரங்கில் நேற்றுசனிக்கிழமை (20-10-2018) சூழல் அரசியலும் நிலஅபகரிப்பும் என்றகருப்பொருளில் உரையரங்குஒன்றுநடைபெற்றது. இங்குஉரையாற்றியபோதேபொ.ஐங்கரநேசன் இவ்வாறுதெரிவித்துள்ளார்.

அங்குஅவர் தொடர்ந்துஉரையாற்றுகையில்,
ஆயுதப்போராட்டம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டபிறகுஅரசு,வனவளத் திணைக்களத்தின் மூலமும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் மூலமும் புதிதுபுதிதாகஎமதுபூர்வீகநிலங்களைக்கையகப்படுத்திவருகிறது.வனவளத் திணைக்களம் 2012ஆம் ஆண்டுக்குப் பிறகுஏறத்தாழ இரண்டு இலட்சம் ஹெக்ரெயர் நிலப்பரப்பை இதுவரையில் அபகரித்துவைத்திருக்கிறது. இதேபோன்று வன ஜீவராசிகள் திணைக்களம் 2016ஆம் ஆண்டுயாழ்.மாவட்டத்தில் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் இயற்கைஒதுக்கிடம் என்று7882 ஹெக்ரெயர் நிலத்தையும் மன்னார் மாவட்டத்தில் விடத்தில் தீவு இயற்கைஒதுக்கிடம் என்று 29,180 ஹெக்ரெயர் நிலத்தையும் பறித்துவைத்திருக்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டுமுல்லைத்தீவுமாவட்டத்தில் நந்திக்கடல் இயற்கைஒதுக்கிடமாக 4141ஹெக்ரெயர் நிலப்பரப்பும் நாயாறு இயற்கைஒதுக்கிடமாக 4464 ஹெக்ரெயர் நிலப்பரப்பும் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்தநிலக்கையகப்படுத்தல்கள் எல்லாம் சுற்றுச்சூழலைக் காப்பாற்றுகின்றபசுமைநடவடிக்கைகளாகவேஉலகத்தின் கண்களுக்குத் தெரியும். ஆனால், இவை பச்சைமுகமூடிஅணிந்துகொண்டுஅரசுதந்திரமாகஎம் மீதுதொடுத்திருக்கின்றஒருபச்சையுத்தம்.இராணுவஆக்கிரமிப்பின் கீழ் உள்ளஎமதுநிலங்களைவிடுவிக்கக்கோரிநாங்கள் நடாத்துகின்றபோராட்டங்களின் நியாயத்தைஉலகம் ஏற்றுக்கொள்ளும். உலகநாடுகளின் அழுத்தம் காரணமாக இந்தநிலங்களைஅரசாங்கம் விடுவிக்கவும் நேரும். இதனால்தான் எவரும் ஆட்சேபிக்காத இயற்கைப் பாதுகாப்புஎன்றபோர்வையில் இப்படிஒருநிலஆக்கிரமிப்பைஅரசுமேற்கொள்ளஆரம்பித்திருக்கிறது.
வன வளத் திணைக்களமும் வன ஜீவராசிகள் திணைக்களமும் ஆக்கிரமித்துள்ளநிலங்கள் எமதுமக்கள் பூர்வீகமாகவாழ்ந்தநிலங்கள்.காலம் காலமாக இவர்கள் பயிர் செய்துவந்தநிலங்கள். இவர்கள் படித்தபாடசாலைகள் உள்ள இடங்கள். ஆனால், இனிமேல் இவர்கள் இங்கு இவை எவற்றையும் செய்யமுடியாது. செவ்விந்தியர்கள் பூர்வீகமாகவாழ்ந்தநிலங்களைஅங்குகுடியேறியஐரோப்பியர்கள் தேசியப்பூங்காங்களாகப் பிரகடனப்படுத்தியேஅவர்களைவலுக்கட்டாயமாகவெளியேற்றிஅவர்களின் நிலங்களைப் பிடுங்கினார்கள்.

இன்றுஅமெரிக்காசெவ்விந்தியர்களின் நாடுஅல்ல. வந்தேறுகுடிகளின் நாடு. இதேஉத்தியைத்தான் இலங்கைஅரசாங்கமும் கையில் எடுத்திருக்கிறதுஎன்றும் தெரிவித்துள்ளார்.
யாழ்.பல்கலைக்கழகஅரசறிவியல் துறைத்தலைவர் கலாநிதிகே.ரி.கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராகவடக்குமாகாணமுதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தொடக்கஉரையாற்ற,து.ஜெயராஜ்,திரு.க.குருநாதன்,ஜே.பி.ஏ.ரஞ்சித்குமார் ஆகியோர் கருப்பொருள் உரைகளைநிகழ்த்தியிருந்தார்கள்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More