வடக்கு, கிழக்கு பட்டதாரிகளை ஏனைய பிரதேசத்திலுள்ளவர்களுடன் ஒப்பிடாது விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற வகையில் விகிதாசாரத்திலோ விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும்.
இந்த தொண்டராசிரியர்கள் கடந்த காலங்களில் யுத்தத்திற்கு முன்னர், யுத்தத்துக்குப் பின்னர் எந்தவித வேதனமும் இன்றி தங்களுடைய குடும்பங்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கடமைகளைச் செய்து வருகிறார்கள். இவர்களுக்கு நல்லாட்சி அரசு இரண்டு தடவைகள் நியமனத்தை வழங்கியிருக்கிறது.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் போராடிய தொண்டராசிரியர்கள் 811பேரில் 739பேருக்கு நியமனங்களைப் பெற்றிருக்கிறார்கள்.வடமாகாணத்தில் இருந்து 350ஆசிரியர்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள்.
நன்றி – UNP News