யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக புத்தளம் எலுவாங்குளம் இரால்மடு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேச மக்கள் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் சடலமாக இருப்பதை அவதானித்து வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளனர்.
குறித்த யானை நேற்று இரவு உயிரிழந்திருக்கலாம் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் அதிகாரிகள்மின்சார வேலியில் சிக்குண்டு குறித்த யானை உயிரிழந்திருக்கலாம் என வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இது தொடர்பானமேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.