இலங்கையில் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதித்தேர்தல் நடக்கவிருக்கையில் தபால் மா அதிபர் ரஞ்சித்ஆரியரத்ன, ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை பற்றி தகவல் தெரிவித்துள்ளார்.
அவர் குறிப்பிடுகையில் ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காத வாக்காளர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானோர் தமது உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை தமது பிரதேச தபால் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியும் எனவும்,நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மாலை 5.00 மணி வரையில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரத்ன தெரிவித்துள்ளார்.
ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக தேசிய அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் பணிகள் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தினமான 16ஆம் திகதி மாலை 5.00 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.