வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமிழ் மக்களிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இதன் போது தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு சிங்களவர்களுக்கு உதவிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயன் சம்பந்தனின் வாய்ச்சவடாலுக்கு ஏமாறாமல் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும்சஜித் பிறேமதாச ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியை மறைந்து வைத்திருப்பதாக தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்,என்றும் தெரிவித்துள்ளனர்.
995 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களேதமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள நிலைப்பாடு குறித்து கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தனர்.