கிரிபத்கொடயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில்ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளுக்கும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான் காரணம் என தெரிவித்தார்.
“மக்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்ற எம்மால் முடியாது போய்விட்டது. நல்லாட்சி என்ற அரசாங்கத்தை ஸ்தாபித்து, மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ள நாம் மறந்து விட்டோம்.
இதற்கு முன்னாள் அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். விசேடமாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்தான் இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை. சுயநலமாகத்தான் சில விடயங்கள் செய்யப்பட்டன.
எமது அரசாங்கம் பாரிய தவறிழைத்து விட்டது. இறுதியில் இதன் பிரதிபலனாகத்தான் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அமைந்தன. இதனால், எமது ஜனாதிபதி வேட்பாளர்தான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார்” என மேலும் தெரிவித்தார்.