0
கிளிநொச்சியில் தைப்பொங்கல் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது. கிளிநொச்சியில் உள்ள மக்கள் தைப்பொங்கல் நிகழ்வை சிறப்பாக கொண்டாடினர். வீடுகளிலும், தொழில்சார் இடங்களிலும் பொங்கலிட்டு இவ்வருடம் சிறப்பாக பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றது.
கிளிநொச்சி மலையாளபுரம் கண்ணகி அம்மன் ஆலயத்தில் 108 பானைகளில் பொங்கல் இடப்பட்டது. பிரதான பானையில் பொங்கலிடப்பட்டதை அடுத்து மக்கள் பொங்கலினை மேற்கொண்டனர். இதன்போது சிறப்பு பூசைகளும் இடம்பெற்றமை குறிப்பிடதக்கதாகும்.