Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை லீசிங் நிறுவனத்தின் மனிதாபமற்ற செயல்…..

லீசிங் நிறுவனத்தின் மனிதாபமற்ற செயல்…..

1 minutes read

வவுனியாவில் இருந்து மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றிலிருந்த பயணிகள் இடைநடுவில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இருந்து பயணித்த குறித்த தனியார் பேருந்து நீண்டதூரம் பயணித்த நிலையில், திடீரென லீசிங் நிறுவன ஊழியர்களால் வழிமறிக்கப்பட்டு  பறித்துச்செல்லப்பட்டுள்ளது.

இந் நிலையில் நடுவீதியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் பெரும் அசெளகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அதனையடுத்து குறித்த பேருந்துக்கு பல மாதங்களாக லீசிங் கட்டுப்பணம் செலுத்தப்படவில்லைஎன கூறிய அவர்கள் பேருந்திலிருந்த பயணிகளை நடு வீதியில் இறக்கிவிட்டு பேருந்து பறித்து சென்றுள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பேருந்தில் பயணித்த மக்கள் அடுத்த பேருந்துக்காக வீதியில் நின்று பல அசெளகரியங்களை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் லீசிங் நிறுவனத்தின் செயற்பாடு குறித்தும், பேருந்து உரிமையாளரின் செயற்பாடு குறித்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகிறது.

அத்துடன் குறித்த பேருந்தில் , வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் பலரும் பயணித்த நிலையில் மனிதாபிமானமற்று பயணிகளை நடுவீதியில் இறக்கிவிட்டுச்சென்ற லீசிங் நிறுவனம் தொடர்பிலும் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பாதிக்கபட்ட பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More