இலங்கையின் தலைமன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்ததாக 39 வயது ஆண், 33 வயது பெண், மற்றும் 7 வயது பெண் குழந்தை என 3 இந்தியர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்களுடன் 2 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இந்தியர்களை படகு மூலம் அழைத்து வந்ததாகக் கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட அனைவரும் தலைமன்னாரில் உள்ள கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், இந்தியர்களை அழைத்து வந்ததாகக் கூறப்படும் இலங்கையர்கள் தலைமன்னார் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம், எந்த நோக்கத்திற்காக இந்தியர்கள் மூவர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்தனர் என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.